ராகுலும் பிரியங்கா காந்தி இருவரும் பெட்ரோல் குண்டு – அணில் விஜ்

உ.பி.,யில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினரை சந்திக்க ராகுலும், பிரியங்காவும் நேற்று மீருட் சென்றனர். ஆனால் வழியிலேயே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தும், மீருட் நகருக்குள்ளேயே இருவரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

 

Related image

 

இதற்காக  அரியானா அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான அனில் விஜ், டுவீட்டரில் ராகுலும், பிரியங்காவும் பெட்ரோல் குண்டுகளை போன்றவர்கள். மக்கள் அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் எங்கெல்லாம் போகிறார்களோ அங்கு நெருப்பை பற்ற வைத்து விட்டு வந்து விடுவார்கள். அதனால் பொதுச் சொத்து தான் சேதமாகிறது என குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாகி உள்ளது.