மும்பை டூ அயோத்திக்கு முஸ்லீம் பெண் பாதயாத்திரை: ராமர் கோயிலை தரிசிக்க ஆர்வம்

மும்பையில் இருந்து அயோதிக்கு முஸ்லீம் பெண் ஷப்னம் ஷேக் நடந்தே வந்தார். அயோத்தியில்   அவர் ஹனுமான் கர்ஹி கோயிலில் பிரார்த்தனை செய்தார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்து மதம் அல்லாதவரும் அயோத்தியில் ராமரை தரிசிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மும்பையில் இருந்து 1,425 கிலோ மீட்டர் தூரம் நடந்தே அயோத்திக்கு ஷப்னம் என்ற முஸ்லிம் பெண் வந்தார். பின்னர் அவர் ஹனுமான் கர்ஹி கோயிலில் பிரார்த்தனை செய்தார். அவர் அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இது குறித்து ஷப்னம் ஷேக் கூறியிருப்பதாவது: இந்த பயணம் எனக்கு சவாலாக இல்லை. நான் வேறு எந்த நாட்டில் வாழ்ந்திருந்தாலும் இது சவாலாக இருந்திருக்கும், ஆனால் நான் இந்தியாவில் வசிக்கிறேன். மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களைக் கடந்து அயோத்தி வந்துள்ளேன். மூன்று மாநிலங்களின் போலீசாரும் எனக்கு உதவி செய்தனர். இவ்வாறு ஷப்னம் ஷேக் தெரிவித்தார்.