முகலாயர் ஆட்சி வெகுதூரம் இல்லை

நாட்டின் பெரும்பான்மையினர் விழிப்புடன் இல்லாவிட்டால், முகலாயர் ஆட்சி ஒன்றும் வெகுதூரம் இல்லை என தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா நேற்று (புதன்கிழமை) தெரிவிக்கையில்,

“நாட்டின் பெரும்பான்மையினர் விழிப்புடன் இல்லாவிட்டாலும், தேசப்பற்றுகொண்ட இந்தியர்கள் துணை நிற்காமல் போனாலும், தில்லிக்கு முகலாயர் ஆட்சி திரும்புவது வெகுதூரத்தில் இல்லை. இதை நினைவூட்டூம் செயல்தான் ஷகீன் பாக்கில் இன்று நடைபெறும் போராட்டம்” என்றார்.

தில்லி ஷகீன் பாக்கில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 50-க்கும் மேற்பட்ட நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.