மிரட்டும் முஸ்லிம்கள்

உத்தரபிரதேசம், அலிகரில் வசிக்கும் காஸிம் என்பவர் அனிதா குமாரி என்பவரை காதலித்து மணந்துள்ளார். தன் குழந்தைகளுடன் ஹிந்துவாக மதம் மாறியுள்ளார். இதனால் அவரையும் அவரது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவோம் என முஸ்லிம் அமைப்பினர் காஸிமுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அலிகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள காஸிம், பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல சமீபத்தில் கேரளா, அலுவாவை சேர்ந்த அபிநாத் என்பவர் முஸ்லிம் பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். அவர் முஸ்லிமாக மதம் மாற வற்புறுத்தப்பட்டார். இதை அவர் ஏற்கவில்லை.

சில நாட்களுக்கு முன் அபிநாத்தின் வீட்டில் ஆயுதங்களுடன்  நுழைந்த 11 பேர் கொண்ட முஸ்லிம் கும்பல் அவரை ‘முஸ்லிமாக மதம் மாறிவிடு அல்லது விவாகரத்து செய்’ என மிரட்டியது. அவர் ஒப்புக் கொள்ளாததால் அவரையும் அவரது தாயாரையும் தாக்கியது. அவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.