ஏமாற்றுகார்களின் புகலிடமா?

டெல்லியில், விவசாயிகள் எனும் பெயரில் இடைத்தரகர்கள் விவசாய சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதற்கு தேசவிரோத கட்சிகள், பயங்கரவாத அமைப்புகள், பிரிவினைவாதிகள் துணையாக உள்ளனர். சில விளையாட்டு வீரர்களும் சுயலாபத்துக்காக இதில் இணைந்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் கூடைப்பந்து விளையாட்டு வீரரான சத்னம் சிங். இவர் கடந்த இரண்டு வருடங்களாக தன் மீதான ஊக்க மருந்து விசாரணையில் ஆஜராகாமல் உள்ளவர். இதேபோல காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் போட்டியிட்டு தோல்வியுற்ற குத்துசண்டை வீரர் விஜேந்திர சிங்கும் உள்ளார். இவர் மீது கடந்த 2012ல்போதை மருந்து கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிட்த்தக்கது.