மாவோஷ்யிஸ்ட் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை கண்டுபிடித்தது ரிசர்வ் போலிஸ்

ஜார்கண்ட் மேதினி நகரில் இருந்து தலைநகர் ராஞ்சி செல்லும் சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் அடங்கிய கூட்டுப் படையினர் திங்கள்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரத்தில் சில வயர்கள் இருப்பதைக் கண்ட அவர்கள் அதனைச் சோதனை செய்தபோது, ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கண்ணி வெடிகளைக் கண்டறிந்தனர். தொடர்ந்து அதனை பத்திரமாக தோண்டியெடுத்த பாதுகாப்புப் படையினர் கண்ணி வெடிகளை, செயலிழக்கச் செய்ய அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி விசாரித்து வருகின்றனர்.