மமதையான மமதா அரசு

மேற்கு வங்கத்தில், மமதாவின் தலைமையிலான அரசு பதவி ஏற்றது முதல் ஹிந்து அமைப்பினர் தாக்கப்படுவது, பா.ஜ.க தொண்டர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. காவல்துறையும் மமதாவின் ஏவல்துறையாக செயல்படுகிறது. இதனால் திருணமூல் குண்டர்களால் நூற்றுக்கும் மேற்பட்ட  பா.ஜ.க தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்தில் பா.ஜ.க ஊர்வலத்தில் போலீசாரின் அத்துமீறலால் பா.ஜ.க தொண்டர் ஒருவர் இறந்தார். பா.ஜ.கவின் தேசியத்  தலைவர் ஜே.பி. நட்டாவின் வாகனம் தாக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்களால் மேற்கு வங்க பொதுமக்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்துள்ளார் மமதா.

மேற்கு வங்கத்தில் ஜே.பி.நட்டாவின் கார் மீது கற்களை வீசிய போராட்டக்காரர்கள்  - lifeberrys.com Tamil இந்தி