போதை பொருள் புழக்கம் எதிர்கால தலைமுறையை பாதிக்கும் : கவர்னர்

போதை பொருள் புழக்கம் எதிர்கால தலைமுறையினரை அழித்து விடும் என கவர்னர் ரவி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: போதை பொருள் போன்ற சலனங்களில் இரு்நது இளைஞர்கள் விலகி இருங்கள், தங்களது வளாகங்களிலோ அருகாமையிலோ போதை பொருள் நுழையாமல் தடுப்பதை கல்வி நிறுவனங்கள் உறுதிபடுத்த வேண்டும். நமது மாநிலத்தில் போதைபொருள் பரவல் மிக மோசமான அளவிற்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது;

போதை பொருள் புழக்கம் உங்கள் வாழ்வையும் குடும்பத்தையும் சரிபடுத்த முடியாத அளவிற்கு அழித்து விடும். போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். போதை பொருள் புழக்கத்தை தடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.