திருச்சியில் 70 கிலோ கஞ்சா ஆயில் பறிமுதல்

திருச்சியில் 70 கிலோ கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைபொருள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டம் மிமிசல் என்ற பகுதியில் இந்த பொருளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

இதன்மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ. 71 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. திருச்சியில் நேற்றும் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் போதைபொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது திருச்சியில் போதைபொருள் பிடிபட்டுள்ளது.