பேரணி மீது தாக்குதல்

அயோத்தியில் கட்டப்பட விருக்கும் ஸ்ரீ ராமர் கோயிலுக்காக பல்வேறு ஹிந்து அமைப்புகள் மக்களிடம் நன்கொடை பெற விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தி வருகின்றனர். இதனை சீர்க்குலைக்கும் நோக்கில்  சமூக விரோதிகள் பேரணி நடத்துபவர்கள் மீது ஆங்காங்கு மேல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். டிசம்பர் 17 இல் கட்ச் மாவட்டத்தில் காந்திடம் பகுதியில் ராமர் கோவில் கட்டுமான பணிக்காகப் பேரணி நடத்தியவர்கள் மீது சில பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதே போன்று ஒரு சம்பவம் ஜடாயு கிராமத்தில் நடந்துள்ளது. ஜனவரி 16ல் மும்பை காவல்துறை ராமர் கோவில் சுவரொட்டியைக் கிழித்தது. அதனை வீடியோ எடுக்க முயன்ற VHP தலைவர்களைக் கைது செய்தது. இதேபோன்று சில முஸ்லிம் சமூக விரோதிகள் மத்தியப் பிரதேசத்தில், டிசம்பர் 26, 29 தேதிகளில் இரண்டு முறை ஸ்ரீராமர் கோயில் நிதி திரட்டுதல் பேரணி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.