பாரதத்தின் முதல் தனியார் ராக்கெட்

தெலுங்கானா, ஐதராபாதைச் சேர்ந்த, ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள, நாட்டின் முதல் தனியார் நிறுவன ராக்கெட் ‘விக்ரம் – ஐ’ இந்த ஆண்டு இறுதியில் விண்ணில் ஏவப்பட உள்ளது. பாரத விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் விஞ்ஞானிகளான, பவன்குமார் சந்தானா, நாகா பாரத் தாகா இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.’ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தேசிய அளவிலான விருது, சமீபத்தில் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.