பயத்தை பரப்பும் ஊடகம்

உலகிலேயே மாபெரும் கொரோனா தடுப்பூசி இயக்கத்தை பாரதம் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திவருகிறது. இந்நிலையில் இதை சீர்குலைக்க பல சக்திகள் ஊடகங்கள் வழியாக முயன்று வருகின்றன. இருதய நோயால் ஒருவர் இறந்ததை அவர் கொரோனா தடுப்பூசி போட்டதால்தான் இறந்தார் என்று திட்டமிட்டே அரைவேக்காட்டுத் தகவல்களை பரப்பப்படுகின்றன. அரசு, சுகாதாரத்துறை நிபுணர்கள் உறுதியளித்த பிறகும் ஊடகங்களும் திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகளும், சாது சுந்தர் செல்வராஜ் போன்ற பாதிரிகளும் தடுப்பூசிக்கு எதிராக தவறான தகவல்களை திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். மற்ற உலக நாடுகளே தடுப்பூசிக்காக பாரதத்திடம் கையேந்தி உள்ள சூழலில் இதுபோன்று திட்டமிட்டு பரப்பப்படும் செய்திகள், தேசவிரோத செயல்களாகவே கருதப்பட வேண்டும்.