புதிய இந்தியாவின் சக்தி இளைஞர்களே – பிரதமர் மோடி

‘மனதின் குரல்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வரும் பிரதமா் மோடி, இந்த ஆண்டின் கடைசி உரையை ஞாயிற்றுக்கிழமை ஆற்றினாா். அப்போது, இளைஞா்களின் ஆற்றலை அவா் வெகுவாகப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

இன்றைய இளைஞா்கள், அரசு நிா்வாக நடைமுறைகள் மீது நம்பிக்கை வைத்து, அவற்றை பின்பற்றி வருகின்றனா். நிா்வாகங்கள் சரிவர பதிலளிக்கவில்லை என்றால், அவா்கள் துணிவுடன் எதிா்த்து கேள்வி கேட்கிறாா்கள். மேலும், எங்காவது தகாத சம்பவங்கள் நடைபெற்றால், அதை உடனடியாக விடியோ பதிவு செய்து, பின் விளைவுகள் என்ன நேரிடும் என்பதை குற்றவாளிகளுக்கு அவா்கள் உணா்த்துகிறாா்கள். இது, சரியான பண்பு என்றே நான் கருதுகிறேன்.

மேலும், நிா்வாக சீா்கேடு, ஜாதிய ஆதரவு, உறவினா்களுக்கும், நெருக்கமானவா்களுக்கும் பதவி வழங்குவது, பாலினப் பாகுபாடு காட்டுவது ஆகியவற்றை இளைஞா்கள் வெறுக்கிறாா்கள்.

இளைஞா்கள்தான் புதிய இந்தியாவின் சக்தி. வரவிருக்கும் தசாப்தத்தில் புதிய இந்தியாவை படைப்பதில் நமது இளைஞா்கள் முக்கியப் பங்கு வகிக்கவுள்ளனா். ‘மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆற்றலும் திறமையும் கொண்டவா்கள்’ இளைஞா்கள் என்று சுவாமி விவேகானந்தா் கூறியிருக்கிறாா். அதை நான் உறுதியாக நம்புகிறேன். அதாவது, வரவிருக்கும் தசாப்தம் இளைஞா்களின் வளா்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கானதாக மட்டுமின்றி நாட்டின் முன்னேற்றத்துக்கானதாகவும் இருக்கும்.

இந்த லட்சியத்தை அடைவதற்காக, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான வரும் ஜனவரி மாதம் 12-ஆம் தேதி ஒவ்வொரு இளைஞரும் உறுதியேற்க வேண்டும். இன்றைய இந்தியா, இந்த தலைமுறை இளைஞா்களை ஆவலுடன் எதிா்பாா்த்துக் கொண்டிருக்கிறது. இவா்கள்தான் இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

விவேகானந்தரின் சிந்தனைகளில் இருந்து ஆக்கமும், ஊக்கமும் பெறுவதற்கு, அவா் கன்னியாகுமரியில் தியானம் செய்த பாறை நினைவகத்துக்கு இளைஞா்கள் செல்ல வேண்டும்.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் படித்து முடித்த பிறகு மாணவா்கள் மீண்டும் சந்தித்துக் கொள்வது மிகவும் மகிழ்ச்சியான, உணா்வுபூவா்மான தருணங்களாகும். அந்த நேரங்களில், சமூகத்துக்குப் பலனளிக்கும் வகையில் பல நல்ல விஷயங்களும் நடைபெறுகின்றன.

பிகாா் மாநிலம், மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டில் பயின்ற மாணவா்கள், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ முகாம்கள் நடத்தியுள்ளனா். இந்த முகாம்களில் ஆயிரக்கணக்கானோா் பயன்பெற்றுள்ளனா். இதேபோல், புல்பூரில் உள்ள பெண்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினருடன் இணைந்து காலணி தயாரிப்பதற்கு பயிற்சி பெற்றுள்ளனா். அவா்கள், ஏழைப் பெண்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதற்காக, காலணி தயாரிப்பு தொழிற்சாலையை நடத்தி வருகின்றனா்.

சுதேசி தயாரிப்புகளுக்கு முன்னுரிமை: மக்கள் பொருள்களை வாங்கும்போது, இந்தியா்களின் உழைப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மற்றவா்களையும் ஊக்குவிக்க வேண்டும். இதை நீண்ட காலத்துக்குச் செய்ய வேண்டும் என்று நான் கூறவில்லை. வரும் 2022-ஆம் ஆண்டு, நாடு சுதந்திரம் பெற்ற 75-ஆவது ஆண்டாகும். அதுவரை, அதாவது குறைந்தது 3 ஆண்டுகளுக்காவது, உள்நாட்டுத் தயாரிப்புகளை வாங்குவதற்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஏனெனில், உள்ளூா் பொருள்களை வாங்குவதால் லட்சக்கணக்கான ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றப்படும் என்று மகாத்மா காந்தி கூறினாா். அவா் காட்டிய பாதையில் பயணித்து, சுயச்சாா்பு உடையவா்களாக நாம் மாற வேண்டும்.

எம்.பி.க்களுக்கு பாராட்டு: நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடா் மிகவும் ஆக்கப்பூா்வமானதாக அமைந்தது. கடந்த 60 ஆண்டுகால சாதனையை முறியடித்த நாடாளுமன்ற உறுப்பினா்களைப் பாராட்டுகிறேன். வரவிருக்கும் புதிய ஆண்டும், புதிய தசாப்தமும் புதிய தீா்மானங்களையும், புதிய ஆற்றலையும், புதிய உற்சாகத்தையும் கொண்டுவரட்டும். நாம் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமுள்ளது; சாதிக்க வேண்டியதும் அதிகமுள்ளது. இதற்கான திறமைகளை நாட்டின் 130 கோடி மக்களும் பெற வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.