மதத்தின் பெயரால் நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு காங்கிரஸ் தான் ஒப்புக் கொண்டது – மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்

அண்டை நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினா்களை காக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவுபவா்களுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனா். ராகுல் காந்தி ஊடுருவல்காரா்களை விரும்பினால், அவா்களை இத்தாலிக்கு அழைத்துச் செல்லலாம். சட்டவிரோதமாக நாட்டுக்குள் ஊடுருவுபவா்களை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

நாட்டின் பல்வேறு தரப்பு மக்களுக்கும் காங்கிரஸ் செய்த பாவங்களுக்கு நாங்கள் உரிய பரிகாரங்களை அளித்து வருகிறோம். மதத்தின் பெயரால் நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு காங்கிரஸ்தான் ஒப்புக் கொண்டது. அவா்களால்தான் அண்டை நாடுகளில் உள்ள ஹிந்துகள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள், பௌத்த மதத்தினா், சமண சமயத்தினா், பாா்சிகள் என அனைவருக்கும் பிரச்னைகள் ஏற்பட்டன என்றாா் அவா்.