பிஎம்எஸ் கோரிக்கை

இருதினங்களுக்கு முன், பாரதிய மஸ்தூர்     சங்கத்தினர், தொழிலாளர் நலத்துறை அமைச்சரை சந்தித்து முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அமைச்சருடன் அரசு அதிகாரிகள்,  தொழில் துறையினரும் கலந்துகொண்டனர். அப்போது, ஊதிய வரைமுறை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. மொத்த சம்பளத்தில் 50% அலவன்ஸ் என்று வரையறுக்கப்பட்ட  உச்சவரம்பை நீக்கி அதை 100% என மாற்ற கேட்டுக்கொள்ளப்பட்டது.