ஒரு ரூபாய்க்கு சாப்பாடு

கிழக்கு டெல்லியின் பா.ஜ.கவின் எம்.பியான முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் அண்மையில் ஒரு ரூபாய்க்கு உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். ‘ஜன் ரசோய்’ என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தில் சத்தான தரமான உணவு, தூய குடிநீர் உள்ளிட்டவை தினமும் 500 பேருக்கு வழங்கப்படும். தேவைக்கேற்ப கிழக்கு டெல்லியில் இதேபோல மேலும் ஆறு உணவகங்கள் திறக்கப்படும் என காம்பீர் தெரிவித்தார். ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் விசாலாமாக அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தால் ஏழைகள் பலர் பலனடைவார்கள்.

One thought on “ஒரு ரூபாய்க்கு சாப்பாடு

  1. சிறப்பு. பயனாளர்களை அதிகரித்து பசிப் பிணி என்னும் பாவியை ஒழிக்க வாழ்த்துக்கள்.

Comments are closed.