களை நீக்கி பயிர் வளர்

நேற்று தேசம் முழுவதும் உள்ள விவசாயிகளுடன் காணொளிக் காட்சி வாயிலாக உரையாடினார் பிரதமர்.  பல்வேறு  மாநில விவசாயிகள் மத்திய அரசின் பயிர் காப்பீடு போன்ற திட்டங்களால்  பயனடைந்து வரும் தகவல்களை பகிர்ந்து கொண்டனர். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சுப்பிரமணி என்பவர்  சொட்டுநீர் பாசனத்தின் மூலம் தன் வருமானம் மும்மடங்கு பெருகியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்தார். பிரதமர் அவரிடம், ” நீங்கள் உங்கள் வருமானத்தை மட்டும் பெருக்க வில்லை, தண்ணீரைச் சேமித்து வருங்காலச் சந்ததியினரின் வளத்தையும் பெருக்கியிருக்கிறீர்கள் “என்று பாராட்டினார். கம்யூனிஸ்ட்டுகள், மமதா, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள்  விவசாயிகளைக் குழப்புவதையும் விளக்கிக் கூறினார்.