பயங்கரவாத ஆதரவு பிஎப்ஐ

‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்புக்கு கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது என, கேரள நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு பல்வேறு பண மோசடி வழக்குகளில் ஈடுபட்டுள்ளது.  இதுவரை, 100 கோடி ரூபாய்க்கு மேல், இந்த அமைப்பின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக நன்கொடைகள் வந்துள்ளன. டில்லியில் நடந்த, சி.ஏ.ஏ., வன்முறைக்கு இந்த அமைப்பு பண உதவி செய்துள்ளது.  சமீபத்தில், பெங்களூரில் நடந்த வன்முறைக்கும் இந்த அமைப்பே காரணம். விவசாய சட்ட எதிர்ப்பு போராட்டத்திலும் இந்த அமைப்பின் கைவரிசை உள்ளது.