தூக்கம் கலையுமா?

ஹிந்துக்களை தொடர்ந்து திராவிட கட்சிகள் புண்படுத்தி வருகின்றன. மாற்றுமத மேடையிலும் ஹிந்து வசைபாடல்கள் தொடர் கதையாகிவிட்டன. ‘ஹிந்து என்று சொன்னாலே எறிகிறது’ என்கிறார் ஒரு பெண்மணி, அதற்கு கைதட்டுகிறார்கள் ஸ்டாலினும் எஸ்ரா சற்குணமும். பகவத்கீதையின் சாராம்சம் புரியாமல் அதை கொச்சைப் படுத்துவது, மனு சாஸ்திரத்தை கேலி செய்வது, மற்ற சாதி பெண்கள் குறித்து தவறாக பேசுவது என தொடர்ச்சியாக ஹிந்து தர்மத்தை தொடர்ந்து இகழ்கிறார் திருமாவளவன். இதேபோல கம்யூனிஸ்ட்டுகள், வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, வேல்முருகன், வைரமுத்து போன்றோரும் ஹிந்து எதிர்ப்பில் தத்தம் பங்குகளை செய்து வருகின்றனர். சமூக அமைதிக்கும் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் இது போன்ற செயல்களுக்கு, எந்த நீதிமன்றமும் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்யவில்லை. தமிழக அரசும் முன்வந்து நடவடிக்கை எடுப்பதில்லை. ஹிந்து அமைப்புகள் மட்டுமே போராடுகின்றன. ஹிந்துக்கள் ஒன்றுபட வேண்டும். ஹிந்துவிரோத கட்சிகள் அமைப்புகளை புறக்கணிக்க வேண்டும். இது ஒன்றே, இதை போன்ற ஹிந்து விரோத போக்குகளை முற்றிலுமாக ஒழிக்க ஒரே வழி.