பலூச் போராட்டம்

பாகிஸ்தானில், தனி நாடு கேட்டு பல வருடமாக போராடுகின்றனர் பலுசிஸ்தானியர்கள். இந்நிலையில், இருதினங்களுக்கு முன் பலுசிஸ்தானின் ஹர்னாய் மாவட்டத்தின் ஷராக் பகுதியில், பிரண்டியர் கார்ப்ஸ் படைப் பிரிவின் நிலையை பலுசிஸ்தான் விடுதலை முன்னனி போராளி குழுவினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் 14 வீரர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பாக். இராணுவம் தற்போது அப்பகுதியில் போராளிகளை தேடி வருகிறது.