பாடம் புகட்டப்பட்டது

அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு நிதி திரட்ட, சில தினங்களுக்கு முன் மத்தியபிரதேசம் உஜ்ஜயினியில் ஒரு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பேரணி, பேகம்பாக் பகுதியை அடைந்தபோது சிலர் தங்கள் வீடுகளில் இருந்து, பேரணி மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் பேரணியில் வந்த பலர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அயாஸ் முகமது, வாஸிம் அஸ்லம், ஷதாப் அக்ரம், அல்து அஸ்லாம் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது. இதில் கற்கள் எறிய பயன்படுத்தப்பட்ட ஒரு வீட்டை காவல்துறையினர் இடித்துத் தள்ளினர். அந்த வீடு அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.