நியூஸிலாந்தில் சமஸ்கிருதம்

நியூஸிலாந்து நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கௌரவ் சர்மா இந்திய வம்சாவளினர். இவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை இந்திய- நியூஸிலாந்து நாடுகளின் பாரம்பரியத்தை மதிக்கும் வகையில் முதலில் நியூஸிலாந்தின் மௌரி மொழியிலும் பின்னர் சமஸ்கிருதத்திலும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

சமஸ்கிருத மொழியில் பதவியேற்றுக்கொண்டார். ஹிமாச்சல பிரதேசம் ஹமீர்பூரை பூர்வீகமாகக் கொண்ட 33 வயதான கௌரவ் தொழிலாளர் கட்சியின் சார்பில் ஹாமில்டன் மேற்கு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.