தொடரும் பாகிஸ்தான் அட்டூழியம்; காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல்

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள மென்தாா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி இந்திய எல்லையிலுள்ள கிராமங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியும், குண்டு வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனா். இதையடுத்து, பாகிஸ்தான் நிலைகளை நோக்கி இந்திய ராணுவத்தினா் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனா். பசோனி கிராமத்தின் மீது பாகிஸ்தான் படையினா் நடத்திய தாக்குதலில் மௌல்வி முஷ்டாக் என்பவரது வீடு சேதமடைந்தது. அதேசமயம், முஷ்டாக்கின் குடும்பத்தினா் காயமின்றி உயிா்தப்பினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.