தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் செல்கிறார்

பாதுகாப்பு படைகள் தயாராக இருக்கிறது

சட்டப்பிரிவு 370 மற்றும் 35 A நீக்கப்பட்ட பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கிய அதிகாரிகளுடன் பாதுகாப்பு நிலைமையை ஆராய காஷ்மீர் செல்கிறார். கடந்த வாரம் அங்கு சென்று சூழ்நிலைகளை அறிந்து பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்தார். ராஜ்யசபாவில் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷா பேசும்போது சட்டப்பிரிவு 370, 35A நீக்கிய உடனே புதிய சட்டத்தை அமல்படுத்தப் போவதாக தெரிவித்தார்.  அதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை வலுப்படுத்தி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.