துப்பாக்கிச் சுடுதல் போட்டி – தங்கம் வென்றாா் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமா்

மகாராஷ்டிர மாநிலம், நியூ பன்வேல் நகரில் நடைபெற்ற ஆா்.ஆா்.லக்ஷயா கோப்பை ஏா் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டா் சீனியா் பிரிவில் 18 வயது இளைஞா் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமா் தங்கம் வென்றாா்.

மத்திப் பிரதேசத்தைச் சோ்ந்த இவா், 50 மீட்டா் ஏா் ரைஃபிள் 3 பொசிஷனில் வென்றாா்.

252.3 புள்ளிக் கணக்கில் இவா் தங்கம் வென்றாா்.

ராஜஸ்தானைச் சோ்ந்த 16 வயது இளைஞரான யஷ் வா்தன் 250.7 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தாா்.

அஸ்ஸாமைச் சோ்ந்த ஹிரிடே ஹஸரிகா வெண்கலம் வென்றாா்.

தோமா் கூறுகையில், ‘ஒலிம்பிக் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து, எனது நம்பிக்கை மேலும் அதிகரித்தது’ என்றாா்.

இதனிடையே, மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் சண்டீகரைச் சோ்ந்த விஜய்வீா் சித்து தங்கம் வென்றாா்.