தி.மு.க வினரின் வன்முறை

கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் கட்சிப்பணிக்காக சென்று ஊர் திரும்பிய தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க தொண்டர்களை செங்கோட்டை சாலையில் அவர்களை வழிமறித்த தி.மு.க குண்டர்கள் அவர்களை தரக்குறைவாக திட்டியும், தாக்கியும் உள்ளனர். இது குறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சம்பவத்தில், அம்பேத்கர் நினைவுநாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், தி.மு.கவினர் மாலை போடவிடாமல் தடுத்தனர். அப்போது ‘சனாதன தர்மத்தை வேரறுப்போம்’ என ஹிந்துக்களுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டது. இதை போன்ற சம்பவங்கள் தி.மு.க கூட்டணியினரின் ஹிந்துவிரோத கொள்கைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.