திருக்குறள் – தமிழ் வளர்ச்சித்துறை

திருக்குறள் பல மொழிகளிள் மொழியாக்கம் செய்யப் பட்டு வெளிவந்துள்ளது. சென்னை பல்கலையின் அரபு மொழித் துறை தலைவர் ஜாஹிர் உசேன் திருக்குறளை, அரபியில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்,திருக்குறள், அரபியில், இசையுடன் கலந்த பாடலாக ஒலிப் புத்தகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, முகப்பேரை சேர்ந்த கட்டடக்கலை பொறியாளரான ஜஸ்வந்த சிங், திருக்குறளை, அதன் இயல் தன்மையுடன் ஓலைச்சுவடியில் எழுதியுள்ளார். இவரை தமிழ் வளர்ச்சித்துறை பாராட்டி, கௌரவித்தது.