காஞ்சியில் இருந்து காணிக்கை

ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர நிதி சேகரிப்பு துவக்க நிகழ்ச்சி காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் நடைபெற்றது ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருக்கரங்களால் நிதியளித்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிக்ஷத் மாவட்ட தலைவர் சிவானந்தம், தர்ம பிரசார் பிரமுக் நந்தகுமார் ஸ்தபதி, குமரகோட்ட ஸ்தானீகர் ஸ்ரீகாமேஸ்வர குருக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.