திமுகவின் அட்டகாசம்

அந்த காலத்தில் இருந்தே, ஆட்சியில் இல்லாதபோதே இவர்கள் இப்படியா என மக்களின் முகம் சுளிக்க வைப்பதில் தி.மு.கவுக்கு இணை யாரும் இல்லை. கடப்பாக்கல் திருட்டு, பிரியாணி குஸ்தி, பியூட்டி பார்லர் அடாவடி, பஜ்ஜிக்கு பைட் என இவர்களின் சமீபகால அடாவடிகளே இதற்கு சாட்சி. அந்த வகையில் மதுரை தி.மு.க சட்டசபை உறுப்பினர் மூர்த்தியும் தன் பங்கை சிறப்பாக செய்து வருகிறார். மதுரை வடக்கு, சிறுதூர் கிராமத்தின் பெரிய கண்மாயில் நீர் நிறைந்துள்ளது. எனினும் தன் சுயநலத்திற்காக சிறிய கண்மாயை மணல் மூட்டைகளை வைத்து அடைத்து தண்ணீர் திறக்காமல் விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார் மூர்த்தி என பொதுமக்கள் கூறுகின்றனர். இவர் மீது ஏற்கனவே பலவழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.