காங்கிரசில் பெருகும் பிரச்சினை

மூ ழ்கும் கப்பலான காங்கிரஸ் கட்சியில் சோனியாவின் குடும்பம் மட்டுமே அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி சர்வாதிகாரியாக செயல்படுகிறது. மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை. விரக்தியில் உள்ள அவர்கள் வெளியிடும் அறிக்கைகள் இவற்றை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. மூத்த காங்கிரஸ் தலைவர் ஆன்ந்த் சர்மா சமீபத்தில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை நேரில் சென்று பார்வையிட்டதை புகழ்ந்து பேசியுள்ளார். இது சோனியா குடும்பத்திற்கு மேலும் புகைச்சலை கிளப்பியுள்ளது.