கம்யூனிஸ கொலை மிரட்டல்

கேரளாவில் பாஜகவினர்  உள்ளாட்சி பிரச்சார தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். பிணராயி தொகுதி  பா.ஜ.க வேட்பாளரின் தலைமை ஏஜெண்டாக முன்னாள் வேளாண்துறை அலுவலரான ஆர்.கே பிரேம்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பிணராயி தொகுதியில் இவர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கம்யூனிச கட்சியினர் பிரேம்தாஸின் வீட்டிற்கே சென்று அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற மிரட்டல்கள் தங்கள் வேலையை சிறிதும் பாதிக்காது என பா.ஜ.கவினர் தெரிவித்துள்ளனர்.