தாய் மொழியில் தொடக்கக் கல்வி

எந்த ஒரு தனி நபருக்கும், சமுதாயத்திற்கும் அதன் கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாப்பதில் மொழிக்கு முக்கிய பங்கு இருப்பதாக அகிலபாரத பிரதிநிதி சபை கருதுகிறது.

நம்முடைய கலாச்சாரம், உன்னதமான பாரம்பரியம் ஆகியவற்றை பாதுகாப்பதில் மொழிகள் முக்கியமானவை. எழுத்துபூர்வமான இலக்கியங்களை படிப்பதன் மூலம் கிடைக்கும் அறிவைக் காட்டிலும், வாவழியாக திரும்பத் திரும்ப சோல்லக் கேட்ட கதைகள், புராணங்கள், பாடல்களால் கிடைத்த அறிவு அதிகம்.

ஆனால், சமீபகாலமாக சில பாரதீய மொழிகள் பேச்சு வழக்கில் இருந்து மறைந்து வருகின்றன. மக்கள் உரையாடல்களில் பாரதீய மொழிகளில் உள்ள சோற்களுக்கு பதில் பிற மொழி சோற்கள் ஆக்கிரமித்து வருவது மிகப்பெரிய சவாலாகியுள்ளது.

எனவே இந்த நாட்டுக்கே உரிய, பாரதீய மொழிகளை பாதுகாத்து ஊக்குவிக்க அரசு, கொள்கை வகுப்பாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட ஒட்டுமொத்த சமுதாயமும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு தொடக்கக் கல்வியானது தாய் மொழி அல்லது பாரதீய மொழிகளில் ஏதாவது ஒன்றில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த கண்ணோட்டம் பெற்றோர்களுக்கும் வர வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

இன்ஜினியரிங் போன்ற தொழில்நுட்ப படிப்புகள், மருத்துவம் உட்பட எல்லா உயர் படிப்புகளுக்கான பாடத்திட்டம், பரீட்சை எழுதுவதற்கான விருப்ப மொழித் தேர்வு ஆகியவற்றில் எல்லா பாரதீய மொழிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

எல்லா பிராந்திய மொழிகளிலும் நீட் தேர்வு எழுதலாம் என்ற மத்திய பாடதிட்ட வாரியத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதேபோன்று தேசிய அளவில் நடத்தப்படும் எல்லா போட்டித் தேர்வுகளிலும், எந்தெந்த தேர்வில் எல்லாம் பிராந்திய மொழிகளுக்கு வாப்பு இல்லையோ அந்த தேர்வுகளில் அவரவர் தாய்மொழி அல்லது விரும்பிய பாரதீய மொழிகளில் தேர்வு எழுத வாப்பு ஏற்படுத்த வேண்டும்.

அரசுத் துறைகளில், நீதித்துறைப் பணிகளில் பாரதீய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசு மற்றும் அரசுசாரா துறைகளில் நடக்கும் நியமனம் உள்பட எல்லாவிதமான நடவடிக்கைகளிலும் ஆங்கிலத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கு பதில் பாரதீய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

* ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உட்பட ஒட்டுமொத்த சமுதாயமும், குடும்பத்தில் தினசரி நடைபெறும் உரையாடல்கள்னது அவரவர் தாய் மொழியில் நடைபெறச் செய்ய வேண்டும்.

* பாரதீய மொழியில் உள்ள இலக்கியங்கள், புத்தகங்களை சேகரிப்பது, வாசிப்பது என்ற பாரம்பரிய பழக்கவழக்கத்தை மேலும் செம்மைபடுத்த வேண்டும்.

* பாரதத்தில் சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்துவதில் மொழிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. எனவே ஒருவர் அவரது தாய்மொழி மீது பெருமிதம் கொண்டிருப்பதை போலவே பிற மொழிகளுக்கும் சமமான மதிப்பு, அந்தஸ்து வழங்க வேண்டும்.

* பாரதீய மொழிகளை பாதுகாக்க, அவற்றை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த தீர்மானம் அகிலபாரத பிரதிநிதி சபாவால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

 

ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைவோர் அபார அதிகரிப்பு!

ஆர்.எஸ்.எஸ்ஸின் (தேசிய பொதுக்குழு) கூட்டம், ஆர்.எஸ்.எஸ் தலைமையகமான நாகபுரியில் மார்ச் 9, 10, 11 தேதிகளில் நடந்தது. அதன் விவரங்களை சேலத்தில் வடதமிழக ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே. குமாரசாமி செய்தியாளர்களிடம் எடுத்துக் கூறியதிலிருந்து:

ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஸ்ரீ மோகன்ஜி பாகவத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அகிலபாரத பிரதிநிதிகள், மாநில மற்றும் அகிலபாரத நிர்வாகிகள், ஆர்எஸ்எஸ்ஸின் குடும்ப அமைப்புகளின் அகிலபாரத பொறுப்பாளர்கள் உட்பட 1461 பேர் கலந்து கொண்டனர்.

சங்கத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செவது வழக்கம். அதன்படி ஆர்எஸ்எஸ் தலைவர் ஸ்ரீ மோகன்ஜி பாகவத் முன்னிலையில் நடந்த தேர்தலில், அகில பாரத பொதுச் செயலாளராக ஸ்ரீ சுரேஷ் ஜோஷி (பையாஜி ஜோஷி) மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

ஏற்கனவே அகில பாரத இணைப் பொதுச் செயலாளர்களாக இருந்த ஸ்ரீ சுரேஷ் சோனி, டாக்டர் கிருஷ்ண கோபால், ஸ்ரீ தத்தாத்ரேய ஹொசபலே, ஸ்ரீ பாகயா ஆகியோரோடு, அகில பாரத செதித் தொடர்பாளராக இருந்த டாக்டர் மன்மோகண் வைத்யா அகில பாரத இணை பௌத்திக் ப்ரமுக்( அறிவுசார் துறை) ஆக இருந்த ஸ்ரீ முகுந்தா ஆகிய இருவரும் அகிலபாரத இணைப் பொதுச் செயலாளர்களாக தேர்வு செயப்பட்டனர்.

ஆர்எஸ்எஸ் அகிலபாரத செதித் தொடர்பாளராக ஸ்ரீ அருண்குமார் தேர்வு செயப்பட்டார்.

ஆர்எஸ்எஸ் தென்பாரத தலைவராக இருந்த தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீ வன்னியராஜன் அவர்கள் மீண்டும் தேர்வு செயப்பட்டுள்ளார். இவர் மதுரையை அடுத்த திருவேடகம் விவேகானந்தா கல்லூரி முதல்வராக பணியாற்றியவர். ஆர்எஸ்எஸ் வட தமிழக மாநில செயலாளராக ஸ்ரீ ஜெகதீசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஈரோட்டில் விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர், சிறு வயது முதலே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வருகிறார்.

அகில பாரத பிரதிநிதி சபாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பு, சகோதர அமைப்புகளின் அமைப்பு ரீதியான பணிகள் குறித்து புள்ளிவிவரங்கள் அறிக்கையாக தாக்கல் செயப்பட்டன.

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சமூகத்தின் பலதரப்பினரிடையேயும் அதிகரித்துவரும் ஆதரவால் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேருவோர் எண்ணிக்கையும், ஆர்எஸ்எஸ் கிளைகளின் எண்ணிக்கையும், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் அதிகரித்துள்ளது.

சங்க வளர்ச்சி

‘ஆர்எஸ்எஸ்ஸில் இணைவோம்’ என்ற வலைத்தளத்தில் பதிவு செவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2015ல் 31, 800 பேர் வலைத்தளம் வாயிலாக ஆர்எஸ்எஸ்ஸில் சேர்ந்தனர். அந்த எண்ணிக்கை 2016ல் 47,00ஆகவும், 2017ல் 71,800ஆகவும் உயர்ந்தது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்துள்ளனர்.

 

 

 

எட்டு திக்கும் எட்டும் சங்கம்

2017-18ம் ஆண்டில் நாடு முழுவதும் 37,190 இடங்களில் 58,967 தினசரி சந்திப்புகள் நடக்கின்றன. இதுதவிர 16,405 இடங்களில் வாராந்திர சந்திப்புகளும், 7,976 இடங்களில் மாதாந்திர சந்திப்புகள் என நாடு முழுவதும் 83,348 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளைகள் செயல்படுகின்றன. ஆர்எஸ்எஸ் மற்றும் அதில் பயிற்சி பெற்ற நபர்களால் நாடு முழுவதும் 1.70 லட்சம் சேவா காரியங்கள் நடத்தப்படுகின்றன.