தமிழக வீதிகளில் இன்று

ஜனவரி 29 அன்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அணிவகுப்பு ஊர்வலத்தில் 3,000க்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் சங்க சீருடையில் கலந்து கொண்டார்கள். டாக்டர் அம்பேத்கர், குரு கோவிந்த சிம்மன், ஸ்ரீ ராமானுஜர், நேதாஜி போன்ற ஹிந்து தர்ம காவலர்களின் ஜெயந்தியை கொண்டாடும் விதத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள், தமிழகத்தின் வீதிகளில் அன்றைய தினம் தர்மம் வென்றதை வீர வாத்திய முழக்கமிட்டு பிரகடனப்படுத்தின. ஆம். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசில் உள்ளவர்கள் சங்கத்தின் ஹிந்து எழுச்சிப் பேரணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்ததால் ஆர்.எஸ்.எஸ் நீதிமன்றத்தை நாடி, வழக்காடி, வென்று வீறுநடை போட்டு ஹிந்து சமுதாயத்தில் உற்சாக அலை வீசச் செய்தது. சென்னையில் நடைபெற்ற விழாவில் மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பாளர்

பூ.மு.ரவிக்குமார் சிறப்புரை ஆற்றினார்.