தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு

ஓமன் நாட்டில் இருந்து வந்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஒருவருக்கு மட்டுமே இதுவரை கரோனா பாதிப்பு இருந்த நிலையில், தற்போது உத்தரப் பிரதேச மாநில இளைஞருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய வைரஸ் தொற்றாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கரோனா பாதிப்புக்கு உள்ளாகி, இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இந்தியாவைப் பொருத்தவரை நாளுக்கு நாள் அந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழகத்தில் ஒரே ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த நபரும் குணமடைந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், புதிதாக ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது