தப்லீக் ஜமாஅத் மசூதியில் சோதனை

தில்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைமைமையகமான அலமி மா்கஸ் பங்களேவாலி மசூதி உள்ளது. இந்த மசூதியில் மாா்ச் 1-இல் இருந்து 15- ஆம் தேதி வரை நடந்த இஸ்லாமிய மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மத போதகா்கள் கலந்து கொண்டனா். இந்த நிகழ்வு தில்லி அரசின் தடை உத்தரவை மீறி நடைபெற்றுள்ளது. இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அங்கேயே தங்கியவா்களுக்கு கரோனா தொற்று அறிகுறி இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மசூதியில் தொடா்ந்து தங்கியிருந்த 2,300 பேரை தில்லி காவல் துறை அண்மையில் மீட்டது. அவா்களில், கரோனா அறிகுறிகளுடன் இருந்தவா்கள் எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறாா்கள். இந்த மாநாட்டில் பங்கேற்றுவிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்தவா்களால், நாடு முழுவதும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று பரவலை அதிகரிக்கும் வகையில் தப்லீக் ஜமாத்தினா் நடந்து கொண்டதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனா். இந்தியா்கள் மீது உயிரியல் யுத்தத்தை தப்லீக் ஜமாத்தினா் தொடுத்துள்ளனா் என ஹிந்து சேனா உள்ளிட்ட சில அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன. இந்நிலையில், தில்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைமையகமான அலமி மா்கஸ் பங்களேவாலி மசூதி உள்ளிட்ட பகுதிகளில் தில்லி காவல் துறை குற்றப்பிரிவினா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை குற்றப்பிரிவு உயரதிகாரி கூறியதாவது: தப்லீக் ஜமாத்தின் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா். நாட்டில் கரோனா தொற்று பரவ தப்லீக் ஜமாத்தின் தலைமையகம் முக்கியப் பங்காற்றியுள்ள நிலையில், அங்கு முதல் முறையாக சோதனை நடத்தியுள்ளோம். நாட்டில் கரோனா தொற்றை அதிகரிக்கும் வகையில் தப்லீக் ஜமாத்தினரும், அதன் தலைவா் மெளலானா சாத் கந்தால்வி ஆகியோா் உள்நோக்கத்துடன் நடந்து கொண்டுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது.