தனது வேண்டுகோளை ஏற்ற மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

கொரோனா வைரஸ் தொடர்பாக கடந்த 19 ஆம் தேதியன்று நாட்டுமக்கள் முன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் நாட்டுமக்கள் அனைவரும் சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பிரதமரின் வேண்டுகோளை முழுமனதுடன் ஏற்ற இந்திய மக்கள் நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கை கடைபிடித்தனர். மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுசேவை பணியாளர்களுக்கு  நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று மாலை 5 மணிக்கு பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள், அமைச்சர்கள், உயரதிகாரிகள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளின் வெளியே நின்று கைகளை தட்டி நன்றி தெரிவித்தனர். இந்நிலையில், தனது வேண்டுகோளை ஏற்று ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்த இந்திய மக்களுக்கு பிரதமர்மோடி நன்றி தெரிவித்துள்ளார்.