சுற்றுப்புறசூழலை பாதுகாக்க பூமி வந்தனம் பூஜை இந்து ஆன்மிக சேவை கண்காட்சியில்

1,008 பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுப்புறசூழலை பாதுகாப்பதற்காக 2 சிறிய மண் பானைகளை வைத்து பூஜை செய்தனர். இதில் தண்ணீர் நிரப்பிய பானையை கங்காதேவியாகவும், மண் நிரப்பிய பானையை பூமாதேவியாகவும் உருவகப்படுத்தி மாணவிகள் பூக்களால் அர்ச்சனை செய்து பூஜை செய்தனர்.
சுற்றுச்சூழலை பராமரித்தலை வலியுறுத்தி பஞ்சாப் அசோசியேஷன் பள்ளி மாணவ-மாணவிகள் காளிங்க நர்த்தனம் ஆடினர். பூமி மற்றும் தண்ணீரை பாதுகாக்க வேண்டி மாணவிகள் நிகழ்த்திய கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.