சுரப்பாவுக்கு எதிரான மனு தள்ளுபடி

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சூரப்பா அப்பதவியில் நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உரிய ஆதாரங்களை தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தது. கூடுதல் ஆவணங்களுடன் புதிதாக இதே கோரிக்கையுடன் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார் டிராபிக் ராமசாமி. இந்த வழக்கில் பொது நலன் இருப்பதாகத் தெரியவில்லை என்று மீண்டும் தள்ளுபடி செய்தது.