சிலை கடத்தல், இது வியாபாரம் மட்டுமல்ல.

முஸ்லிம் படையெடுப்புகளில் ஹிந்து கோயில்களை இடித்தனர், கொள்ளை அடித்தனர். கத்தி முனையில் மதம் மாற்றினர். இது ஹிந்துக்களை இழிவுபடுத்தும், பாரம்பரியம், கலாசாரங்களை அழிக்கும் ஒரு யுக்தி.

ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும் இவை நடந்தன என்றாலும் சற்று மறைமுகமாக நடந்தன. ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு மதமாற்றம் வேறு பல புதிய கோணங்களில் நடைபெற ஆரம்பித்தன.
பணத்தாசை, ஹிந்து கடவுள்களை இழிவாக சித்தரித்தல், குழப்புதல், மிரட்டுதல், பள்ளிகளில் மூளைசலவை, லவ் ஜிகாத் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மதம்மாற்றம் நடைபெறுகிறது. இதில் ஒருசில பணம் கொழிக்கும் வழிகளும் உள்ளன. அவற்றில் ஒன்று ‘சிலை கடத்தல்.

பல ஆண்டுகளாக சிலை கடத்தல்கள் நடைபெறுகின்றன என்றாலும், சற்று உன்னிப்பாக கவனித்தால் தமிழகத்தில் சிலை திருட்டு அதிகமாகியது, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு கோடிகளில் விற்கப்படுவது எல்லாம் சிறுபான்மை ஆதரவு திராவிட ஆட்சிகள் அமைந்த பிறகுதான் என்பதை உணரலாம்.

அண்மையில் புதுச்சேரியில் கடத்தப்படவிருந்த 74 ஹிந்து தெய்வங்களின் சிலைகள் மீட்கப்பட்டன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மேரி தெரசா, வனினா ஆனந்தி, ஜீன்பால் ராஜரத்தினம் என்கிற கிருஸ்தவர்கள். இதில் இருந்தே சிலை கடத்தல் என்பது வெறும் வியாபாரம் மட்டுமல்ல, அது மதமாற்றத்தின் மற்றொரு முகம் என்றறியலாம்.

அன்றைய தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக இருந்த பொன்.மாணிக்கவேலுக்கு திராவிட வழி வந்த தமிழக அரசு கொடுத்த தொல்லைகள் ஊர் அறிந்த ரகசியம். அது போன்ற நிலை மீண்டும் வரக்கூடாது.