சிநேக மிலனில் சந்தா மழை!

* பெங்களூருவில் உள்ள சங்க தமிழ் குடும்பங்களின் (சிநேக மிலன்) சந்திப்பு நிகழ்ச்சி ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது. 60 குடும்பங்கள் பங்கேற்றன. அந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சி அருமையாக அமைந்தது. வந்தவர்களில் பலர் விஜயபாரதம் சந்தாதாரர்கள். புதியவர்கள் பலர் சந்தாதாரர் ஆனார்கள்.

* டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு வேலை வாய்ப்புக்காக சென்று அங்கேயே தங்கியவர்கள் ஏராளம். அங்குள்ள நமது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை விஜயபாரதம் சந்தாதாரர் ஆக்கிட உதவிடுமாறு நமது வாசகர்களை வேண்டுகிறேன்.

* கடந்த ஏப்ரல் 20 அன்று ஆனந்த விகடனில் ‘இந்தியா, மக்களுக்கா, மதத்துக்கா?’ என்ற தலைப்பில் ஹிந்து இயக்கங்களை கொச்சைப்படுத்தி எழுதிய கட்டுரைக்கு ஏராளமான வாசகர்கள் கண்டனக் கடிதங்களை அனுப்பியுள்ளார்கள். இது மட்டும் போதாது. பல பத்திரிகைகளில் நல்ல விஷயங்கள் கட்டுரைகளாக, செய்திகளாக வருகின்றன. அவற்றைப் பாராட்டி வாசகர்கள் கடிதங்கள் எழுதவேண்டும். நல்லதை மனமாரப் பாராட்டவும் வேண்டும்; தவறுகளை கண்டிக்கும் மனப்பான்மையும் வேண்டும்.