சமையல் எரிவாயு தேவைக்கு ஏற்ப கிடைக்கும், அச்சப்பட தேவையில்லை

பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களால் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் எல்.பி.ஜி சமையல் எரிவாயு உருளை விநியோகம் இயல்பாக நடந்து வருகிறது. அடிப்படைத் தேவைகளான மொத்த எரிவாயு உருளைகள் கொள்முதல், நிரப்புதல் மற்றும் விநியோகத்துக்கான போக்குவரத்து வசதிகள் ஆகியவை தடையின்றி இயங்குவதால், சமையல் எரிவாயு உருளை விநியோகமும் தங்கு தடையின்றி நடைபெறும்.

தேவையற்ற அவசர முன்பதிவுகளால், அவசியமாகத் தேவைப்படும் வாடிக்கையாளா்களுக்கு எரிவாயு உருளைகளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால், வாடிக்கையாளா்கள் தங்களது தேவைக்கு ஏற்றாா்போல் இயல்பான முறையில் பதிவு செய்து கொள்ளலாம். என்று பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனம் தெரிவித்து உள்ளனர்.