தடையை மீறி கூட்டம் கூட்டிய பாதிரியார் கைது

கடைசி ஞாயிறு பிரதமர் மோடி வேண்டுகோளின் படி சுய ஊரடங்கு மக்கள் பேராதரவு தந்தனர். இதனை இடையில் கேரளா சாலக்குடி கூடப்புழா பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் தடை உத்தரவையும் மீறி பிரார்த்தனை நடைபெற்றது. இதில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். இதுதொடர்பாக பாதிரியார் பாலி படயாட்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது விதிகளை மீறுதல், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பிரார்த்தனையில் கலந்துகொண்ட 100 பேர் மீதும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் பாதிரியாரை ஜாமீனில் விடுதலை செய்தனர்.