சமுத்திரபாரதி இலவச மருத்துவமனை

ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள ஆதிவராகநல்லூரில், சமுத்திர பாரதி அறக்கட்டளையின் சார்பில், வேலு நாச்சியார் இலவச மருத்துவ சேவை மையம், வேலு நாச்சியார் மகளிர் மேம்பாட்டு மையம் நேற்று துவக்கப்பட்டது. குஜராத்தின் ஸ்ரீ சாந்த்ராம் மந்திரின் சுவாமிஜி இவற்றை திறந்து வைத்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த டெல்லி ஸ்வயம்சேவகர்களான மருத்துவர் விகாஸ் சதுர்வேதி, மருத்துவர் விஜய் குரானா ஆகியோர் நோயாளிகளுக்கான சிகிச்சையைத் தொடங்கி வைத்தனர். எம். கோபிநாத், சாலை கனகாதரன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களும் சமுத்திர பாரதி நிர்வாகிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த மருத்துவ சேவை மையத்திற்கு தேவையான மருந்துகளை குஜராத்தின் நாடியாட்டில் உள்ள ஸ்ரீ சந்த்ரம் மந்திர் சார்பில் அனுப்பி வைக்கப்படுகின்றன.