சமுதாய மாற்றத்தில் பங்கு பெறுவோம்

உங்களின் அமோக ஆதரவு மற்றும் ஒத்துழைப்பினால் விஜயபாரதம் மின்னிதழ் தற்போது, தினமும் சுமார் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோரை சென்றடைவதாக செய்திகள் வருகின்றன. இதற்கு உங்களின் அளவற்ற தேசபக்தியும், தமிழகம் சிறக்க வேண்டும் என்ற நல்லெண்ணமுமே காரணம் என்றால் அது மிகை அல்ல. இந்த எண்ணிக்கை மேலும் பலமடங்கு அதிகரிக்க உங்களது தொடர் ஒத்துழைப்பு அவசியம் தேவை. இதன் மூலம் தேசிய சிந்தனைகள், உண்மையான நாட்டு நடப்பு, நற்சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். மற்ற பத்திரிக்கைகளில் திட்டமிட்டு மறைக்கப்படும் செய்திகளையும் வெளிப்படுத்த முடியும். எனவே இந்த மின்னிதழ் மேலும் பலருக்கு சென்று சேரும் வகையில் இதனை நாம் வாட்ஸ்அப் குழுக்களில் அதிகம் பகிரலாம். முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரலாம். பல புதியவர்களை இணைக்கலாம். இதழை மேலும் செம்மைப்படுத்த உங்களது ஆலோசனைகளை வழங்கலாம். சமுதாயத்தில் மேன்மையான நல்லதொரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த முயற்சியில் உங்களின் தொடர் ஒத்துழைப்பை என்றும் நாடுகிறோம்.

நன்றி
அன்புடன்,
ஆசிரியர்
விஜயபாரதம் மின்னிதழ்
webvijayabharatham@gmail.com
044 – 2642 0870