சட்ட விரோத மசூதி

பெங்களூரு, கடுகோடி புதிய விரிவாக்க பகுதியில் பொது நிலத்தை ஆக்கிரமித்து மசூதி கட்டியுள்ளது MK சமூகம் மற்றும் கல்வி அறக்கட்டளை அமைப்பு. இதற்கு இவர்கள் அரசிடம் இருந்து எவ்வித முன் அனுமதியோ, ஒப்புதலோ பெறவில்லை. இந்த சட்டவிரோத மசூதியை அகற்றக்கோரி சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் (LRPF) நகராட்சிக்கு புகார் அளித்துள்ளது. சமீபத்தில் சென்னை, விருகம்பாக்கத்தில் இவர்களின் கோயில் நில ஆக்கிரமிப்பு 20 ஆண்டுகள் சட்ட போராட்டத்தால் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலம் மாறலாம் காட்சிகள் மாறுவதில்லை.