வெள்ளை உள்ளங்கள்

சேலம் கோரிமேட்டை சேர்ந்த குழந்தைகள் அஜ்ஜூ தர்ஷினி, தேஜூ தர்ஷினி. வீட்டு செலவுக்கு பணம் எடுக்க ஏடிஎம் சென்றனர். அதில் பத்தாயிரம் ரூபாய் வந்தது. எதிர்பாராமல் கிடைத்த அதிக தொகையை காவல்துறை மூலம் உரியவரிடம் சேர்த்துள்ளனர். இவர்களது தந்தை பக்கவாதம் பாதித்தவர். தாய் டியூசன் எடுக்கும் சொற்ப வருமானத்தில்தான் வாழ்க்கை நடக்கிறது. சேலம் மாநகர காவல் ஆணையர் தலா ஆயிரம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழை சிறுமிகளுக்கு வழங்கினார். அந்தத் தொகையை பிரதமர் மற்றும் முதல்வரின் கொரோனோ நிவாரண நிதிக்கு இரண்டு சிறுமிகளும் வழங்கி விட்டனர்.
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.