கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்குவது பக்தர்களிடையே அதிர்ப்தி – எச்.ராஜா

சென்னை, தேனி, தாராபுரம் போன்ற இடங்களில் நடந்த சி.ஏ.ஏ., எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை நடந்துள்ளது. இது பெரிய கலவரத்தை ஏற்படுத்த போராட்டகாரர்கள் தங்களை ‘வார்ம் அப்’ செய்து கொள்கிறார்கள் என்றே கருதுகிறேன். தேசிய மக்கள் கணக்கெடுப்பின் போது மக்களின் சுய விபரங்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன. இந்த விபரங்களை தருவதற்கு யாரும் தயங்க தேவையில்லை.

கோயில் நிலங்களை பக்தர்கள் தானமாக வழங்கியுள்ளார்கள். அந்த நிலங்களுக்கு அரசு பட்டா வழங்க ஆணை பிறப்பித்துள்ளது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் நிலங்கள் குறித்த விபரங்களை மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்னும் வெளியிடாமல் உள்ளது’ என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார்.