கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளது சென்னை மாநகராட்சி

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை பணிகலில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமுள்ள தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியில் covid-19. Volunteers Registration & NGO’s Registration என்ற இணைப்பில் தங்கள் விவரங்களை பதிவு செய்யவும், கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள், உதவிப் பொருட்கள் மற்றும் தங்களால் வழங்கக் கூடிய பொருட்களின் விவரங்களை044- 25384530 என்ற 24 மணி நேரம் இயங்கக் கூடிய தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறும் ஆணையர் கோ.பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.”இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.