கேள்விக்குறியாகும் அரசியல் வாழ்வு

தொடர்ந்து ஹிந்துக்களையும் ஹிந்து தர்மங்களையும் இழிவாக பேசி வருபவர் திருமாவளவன். சமீபத்தில் மனுதர்மத்தை குறித்து பேசி ஹிந்துக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார். இவரது இந்தப் பேச்சு டெல்லிவரை விஸ்வரூபம் எடுத்தது. டெல்லி சபாநாயகர் அலுவலகத்தில் அவர்மீது புகாரளிக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளார் என அவர் மீது மத்திய சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரனைக்கு வரவுள்ளது. இது நிரூபணமானால் அவர் பதவி பறிபோகும் என்பதுடன் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் அவரது அரசியல் வாழ்வு கேள்விக்குறியதாகிவிடும் என சொல்லப்படுகிறது.