அஞ்சல் குறைதீர் கூட்டம்

அஞ்சல்துறை சார்பில், அஞ்சல் குறைதீர்ப்பு கூட்டம், சென்னை பாரிமுனையில் உள்ள பொது அஞ்சல் அலுவலகத்தில் வரும் டிசம்பர் 16-ல் நடைபெறும். வாடிக்கையாளர்கள் நேரிலோ, தபாலிலோ குறைகளை தெரிவிக்கலாம். அஞ்சலில் தெரிவிக்க விரும்புவோர். கா. வெங்கடாசலம், முதன்மை அஞ்சல் அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகம், சென்னை – 600 001 என்ற முகவரிக்கு டிசம்பர் 12க்குள் கடிதம் சென்று சேரும் வகையில் அனுப்பி வைக்கவும்.